Skip to main content

உயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை பேர்?


உயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2014-15-ஆம் கல்வியாண்டுக்கான இந்த விவரத்தை மாநில வாரியாக
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மொத்தமுள்ள 2 லட்சத்து 84 ஆயிரத்து 22 பேரில் சிறுபான்மையின மாணவர்கள் 19,315பேர் ஆவர். அதாவது 6.6 சதவீதம் பேர் சிறுபான்மையினர். எம்.சி.ஏ. கல்லூரிகளில் (ஸ்டேன்ட் அலோன்) படிக்கும் 3,258 பேரில் 222 பேர் சிறுபான்மையின மாணவர்கள்.

தமிழகம் முழுவதுமுள்ள 384 மேலாண்மைக் கல்லூரிகளில் 17,532 பேர் படிக்கின்றனர். இவர்களில் 1,308 பேர் சிறுபான்மையின மாணவர்கள். 39 மருந்தாளுநர் (பார்மசி) கல்லூரிகளில் படிக்கும் 2,815 பேரில் 325 பேர் சிறுபான்மையினர் ஆவர்.

11 கட்டடவியல், நகர திட்டமிடல் கல்லூரிகளில் படிக்கும் 801 பேரில் 99 பேர் சிறுபான்மையின மாணவர்கள். 7 ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் கல்லூரிகளில் படிக்கும் 132 பேரில் 11 பேர் சிறுபான்மையின மாணவர்கள் என்பது குறிப்
 பிடத்தக்கது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.