Skip to main content

ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இன்று நிறைவு.

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது.பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்
களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கியது.


மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடைபெற்று முடிந்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. தமிழ், சமூக அறிவியல் பாடத்துக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 578 அறிவியல் பட்டதாரிஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். கடந்த 3 நாள்களில் 1,600 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா