Skip to main content

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிக
ளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும்
வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற இரா சிங்கால், நிதி குப்தா, வந்தனா ராவ் ஆகியோருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது ஜிதேந்திர சிங் இத்தகவலை வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளின் திறனை மெருகேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு 3 மாத கால பயிற்சியை அளிக்கும். தங்களுடைய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும், மத்திய அரசின் அலுவல்களை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு