Skip to main content

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு டெல்லியில் பயிற்சி: மத்திய மந்திரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிக
ளாக நியமிக்கப்படுபவர்கள் தாங்கள் பணி புரிய விரும்பும் மாநிலங்களில் பயிற்சி பெறுவதும், அதன்பிறகு அவர்கள் பணியில் அமர்த்தப்படுவதும்
வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இந்த ஆண்டு முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வானவர்களுக்கு தேசிய தலைநகர் டெல்லியில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நல ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற இரா சிங்கால், நிதி குப்தா, வந்தனா ராவ் ஆகியோருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது ஜிதேந்திர சிங் இத்தகவலை வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளின் திறனை மெருகேற்றும் வகையில் அவர்களுக்கு மத்திய அரசு 3 மாத கால பயிற்சியை அளிக்கும். தங்களுடைய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கும், மத்திய அரசின் அலுவல்களை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக அமையும்" என்று குறிப்பிட்டார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.