Skip to main content

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்


கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.

கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக்
கணக்கை சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் தாக்கல் செய்ய வசதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக 27) சிறப்பு கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டன. சென்னை மக்களுக்கு 30 கவுன்ட்டர்கள், காஞ்சிபுரம் மக்களுக்கு 4 கவுன்ட்டர்கள் என மொத்தம் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன.


தாம்பரம் பகுதிக்கு உள்பட்டு வருமான வரி செலுத்துவோர், தாம்பரம் வருமான வரி அலுவலகத்தில்தான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்திருந்தது.
சிறப்பு கவுன்ட்டர்களில், நான்கு நாள்களில் சென்னையில் மட்டும் இதுவரை 10,000 பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜூலை வரை, சிறப்பு கவுன்ட்டர்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 75,503 பேர் வருமான வரித் தாக்கல் செய்தனர். இவற்றில் சென்னையில் 35,184 பேரும், மற்ற பகுதிகளில் 39,562 பேரும் அடங்குவர். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 கடந்த நிதியாண்டு, ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளோர், வருமான வரிப் பிடித்தத் தொகையை (டிடிஎஸ்) திரும்பக் கோராதோர் மட்டுமே, இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா