Skip to main content

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

'ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைா
சிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களின் அனைத்துவிதமான கல்வி உதவித்தொகைகளும் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதற்கு அவர்கள் ஆதார் எண் சமப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை. அவர்கள் குறித்து கணக்கெடுத்து புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவர்களை,சம்பந்தப்பட்ட கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலங்களில் நடக்கும் சிறப்பு முகாமிற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று படமெடுக்க வேண்டும். அதற்கு அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை ஆதாரமாக கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,”என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா