Skip to main content

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

'ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைா
சிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மாணவர்களின் அனைத்துவிதமான கல்வி உதவித்தொகைகளும் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதற்கு அவர்கள் ஆதார் எண் சமப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்களிடம் ஆதார் எண் இல்லை. அவர்கள் குறித்து கணக்கெடுத்து புகைப்படம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“ பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவர்களை,சம்பந்தப்பட்ட கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலங்களில் நடக்கும் சிறப்பு முகாமிற்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று படமெடுக்க வேண்டும். அதற்கு அவர்களது பெற்றோரின் ஆதார் எண்ணை ஆதாரமாக கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,”என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு