Skip to main content

மௌலானா ஆசாத் உதவித் தொகை: சிறுபான்மையின மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மௌலானா ஆசாத் உதவித் தொகை: சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக
ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி தொடர முடியாமல் சிரமப்படும் மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பயனடைய தமிழகத்தில் வசித்து வரும்  இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
நிகழாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி உதவித் திட்டத்தின் மூலம் 11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் என இரண்டு தவனைகளில் வழங்கப்படும். இக்கல்வி உதவித்தொகை, கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. 

இத்தொகையை பெற மாணவிகள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம். 10-ம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நிகழாண்டில் அரசு  அங்கிகாரம் பெற்ற பள்ளிகளில் 11-ம் படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் பள்ளி சேர்க்கை அனுமதி சீட்டு நகல், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதிமொழி ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை தாங்கள் பயில்கிற பள்ளியில் அளிக்க வேண்டும். 

இதை பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோர் சரிபார்த்து கையொப்பம் செய்து the secretary, maulana azad education fountation, (Ministry or Minority Afairs Government of India) cheims ford road, New Delhi- 110055 என்ற முகவரிக்கு வருகிற 30.9.2015-க்குள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். 

அதேபோல், 2015-16ம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவி தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் www.maef.nic.inஎன்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்கள் குறித்தும் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இக்கல்வி உதவித் தொகை பெற குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு சிறுபான்மையின மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு