Skip to main content

நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வீட்டின் தூசி, துரும்புகள் போதும்!

நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வீட்டின் தூசி, துரும்புகள் போதும்!
‘உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்’ என்ற பழமொழியை தகர்த்தெறியும் வகையில், நம்மைப் பற்றி அறிய வீட்டிலுள்ள தூசி, துரும்புகள் போதும் என சொல்லும்படி சமீபத்திய ஆய்வு
ஒன்று வெளியாகியுள்ளது.

நமது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நுண்ணியிரிகள் வாழ்வதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் கோலராடோ பல்கலைக்கழகமும், வட கேரொலினாவின் மாநில பல்கலைக்கழகமும் நுண்ணுயிர்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது, நமது வீடுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், அங்கே வசிப்பவர் ஆணா? அல்லது பெண்ணா? விலங்குகள் வளர்க்கின்றனரா எனப் பல கேள்விகளிக்கு விடையளிக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 1200 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 5 ஆயிரம் வகை பாக்டீரியாக்களும், 2 ஆயிரம் வகை பூஞ்சைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆண் மட்டுமே வசிக்கும் வீட்டிலிருக்கும் பாக்டீரியாக்கள் பெண்கள் இருக்கும் வீடுகளிலிருந்து மாறுபடுவதை அறிய முடிகின்றது. 

இந்த கண்டுபிடிப்பு, அலர்ஜிக்களைப் பற்றி அறிந்து கொள்ள உபயோகமானதாக இருக்கும். அத்துடன், கைரேகை, ரத்தம், முடி போன்றவற்றை வைத்து பல முக்கிய வழக்குகளை தீர்த்துவைக்கக்கூடிய தடயவியல் துறையினருக்கு, இந்த ஆய்வு முடிவு வேலையை சுலபமாக்கும் என நம்பலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு