Skip to main content

மத்திய அரசு புத்தகப்பை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை  சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.
மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல
அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அனைத்து புத்தகங்களையும் பள்ளிக்கு கொண்டுவருவதைதவிர்க்கும் வகையில் தெளிவான கால அட்டவணையை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வகுத்தளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கொண்டுவராத பாட புத்தகங்கள் தேவைப்படும் போது அவற்றை உடனடியாக பெற உதவும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும்.


டெல்லியில் நாளை நடைபெற உள்ள கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் இந்த விதிமுறைகள் விவாதத்திற்கு வைக்கப்பட உள்ளன. அப்போது முன்வைக்கப்படும் கருத்துகளையும் சேர்த்து புதிய விதிகள் வெளியிடப்படும் என மத்திய மனித வள மேம்மபாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளன. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்