Skip to main content

இன்ஜினியரிங் மாணவரை பட்டை தீட்டும் அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்., ஆகிய படிப்புகளில், பிஎச்.டி., இல்லாமலேயே, ஆராய்ச்சிப் பாடம் துவங்கப்படுகிறது. இந்தப் புதிய திட்டம், எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கு இந்த ஆண்டே அம
லுக்கு வந்துள்ளது. பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் அடுத்த ஆண்டு அமலாகிறது.அண்ணா பல்கலைக்குட்பட்ட, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது. இங்கு படித்தவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அண்ணா பல்கலை, சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, மாணவர்களுக்கு ஆராய்ச்சித் திறனை அதிகரித்தால், அவர்கள் படித்து முடித்ததும், எளிதாக பணிக்கு சேரவும், நல்ல தேர்ச்சி பெறவும் முடியும் என கண்டறியப்பட்டது.

இதற்காக அமைக்கப்பட்ட, ஒன்பது பேராசிரியர்கள் கொண்ட கமிட்டி, புதிய பாடம் மற்றும் தேர்வு முறையை சமர்ப்பித்துள்ளது. இதற்கு, அண்ணா பல்கலை உடனடி ஒப்புதல் அளித்தது. அதை, இந்த கல்விஆண்டிலேயே அறிமுகப்படுத்திஉள்ளது.

இதுகுறித்து, பல்கலை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: புதிய திட்டப்படி, இந்தக் கல்வியாண்டில் எம்.இ., மற்றும் எம்.டெக்., மாணவர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கை தயாரிப்புப் பாடம் துவங்கப்படுகிறது. செய்முறைப் பயிற்சி இல்லாத இந்தப் பாடத்துக்கு, தேர்வில், 20 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். மேலும், 'வைவா' என்ற நேரடி விளக்கங்களும்
பெறப்படும். இதேபோல், பி.இ., மற்றும் பி.டெக்., போன்ற, இளநிலைப் தொழிற்கல்வி படிப்புகளுக்கு, மூன்றாவது செமஸ்டர் முதல் புதிய முறை அறிமுகமாகிறது.

அதிலும், ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தலுக்கு தனியாக, 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே, இனிவரும் காலங்களில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்.,- பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., ஆகிய படிப்புகளுக்கு, மூன்றுவித வினாக்கள் செமஸ்டரில் இடம் பெறும்.
அதாவது, பாடங்களை புரிந்து படித்தலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட, 50 மதிப்பெண்களுக்குப் பதில், இனி, 40 மதிப்பெண்களும், பாடங்களை நினைவு கூர்தலுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட, 50 மதிப்பெண்களுக்குப் பதில், இனி, 40 மதிப்பெண்களும் என, மொத்தம் 80 மதிப்பெண்களும், தனியாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கைகளுக்கு, 20 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
இவ்வாறு பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு