Skip to main content

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்


இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்
டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகியவை ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கின.

இந்தக் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களில் 2,307 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம்:
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 265, மாவட்டம் விட்டு மாவட்டம் - 130
 * சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் ) - 327
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 430
 * உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் (மாவட்டத்துக்குள்) - 249
 * சிறப்பு ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) -157
 * உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 177
 * மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு - 330
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்) - 865
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 570
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 542
 * முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் - 53
 * பணி நிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்:
 தமிழ் - 443
 ஆங்கிலம் - 451
 கணிதம் - 543
 அறிவியல் - 570
 சமூக அறிவியல் - 300
 மொத்தம் - 2,307
 * இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை - 6,402.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு