Skip to main content

சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்


சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.
ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2017-18 கல்வியாண்டு வரை இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வரை இந்தப் பள்ளிகளுக்குக் கட்டண உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகள் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தன. நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளுக்கு இப்போது புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, பல பள்ளிகளுக்கு 2014-15-ஆம் கல்வியாண்டோடு கட்டண நிர்ணயம் முடிவுக்கு வந்தது. சில பள்ளிகள் புதிதாகவும் கட்டண நிர்ணயத்துக்கு வந்தன. இவையனைத்தும் சேர்த்து மொத்தமாக 533 பள்ளிகளுக்கு இப்போது கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த கல்வியாண்டுக்குள் அந்தப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?: இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் சீனியர் செகன்டரி பள்ளி, பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகன்டரி பள்ளி, அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளி உள்பட பல பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா