Skip to main content

சி.பி.எஸ்.இ. உள்பட 533 பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம்


சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாகக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ர்ஸ்.
ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2017-18 கல்வியாண்டு வரை இந்தப் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் வரை இந்தப் பள்ளிகளுக்குக் கட்டண உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியதாவது:

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகள் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருந்தன. நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்தப் பள்ளிகளுக்கு இப்போது புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதோடு, பல பள்ளிகளுக்கு 2014-15-ஆம் கல்வியாண்டோடு கட்டண நிர்ணயம் முடிவுக்கு வந்தது. சில பள்ளிகள் புதிதாகவும் கட்டண நிர்ணயத்துக்கு வந்தன. இவையனைத்தும் சேர்த்து மொத்தமாக 533 பள்ளிகளுக்கு இப்போது கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டு, அந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த கல்வியாண்டுக்குள் அந்தப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?: இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளி, செட்டிநாடு வித்யாஷ்ரம் சீனியர் செகன்டரி பள்ளி, பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் செகன்டரி பள்ளி, அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளி உள்பட பல பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்