Skip to main content

மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு

அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட
உள்ளது.

பள்ளிகளில்...:

தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில் நன்றாக வாசிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு மாணவரையும் தமிழில் பிழையின்றி, நிறுத்தி வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், பத்திரிகை போன்றவற்றை மாணவர்கள் வாசிக்க வேண்டும். எழுத்துக்களின்நடைக்கேற்ப, குறியீடுகளுக்கு ஏற்றவாறு, நிறுத்தி, நிதானமாக வாசித்தாக வேண்டும்.


நுாலக வசதி:

இதில், 50 மாணவர்களை உடைய பள்ளிக்கு, 20 ஆயிரம்; 100 மாணவர் வரை, 30 ஆயிரம்; 150 மாணவர் வரை, 40 ஆயிரம்; 151க்கு மேல் மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த தொகையில், பள்ளி உள்கட்டமைப்பு, நுாலகம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம். 
இந்த பரிசு தொகையை பெற, அனைத்து அரசு பள்ளிகளும், வரும், 7ம் தேதிக்குள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வழியே, எஸ்.எஸ்.ஏ., மாநில தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாதம் மாணவர்களுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளித்த பின், டிசம்பரில் ஆய்வு நடத்தப்படும்.அதைத் தொடர்ந்து, வெற்றி பெறும் பள்ளிகளுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு