Skip to main content

503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு

புதுவையில் 503 மேல்நிலை எழுத்தர் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
புதுவையில் 5 ஆண்டு வசித்த இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பொது பிரிவில் 253, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 90, தாழ்த்தப்பட்டோருக்கு 80 இடங்கள் உட்பட மொத்தம் 503 மேல்நிலை எழுத்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 11-9-2015-ம் தேதியில் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது தளர்வு உண்டு.
2 மணிநேரம் நடைபெறும் எழுத்துத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.கணிதம். பொது அறிவியல், ஆங்கிலம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய வரலாறு, பொது அறிவு, தற்போதைய நடப்பு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த எழுத்துத்தேர்வுக்கான நாள், இடம், நேரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.தகுதிவாய்ந்தவர்கள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.செப்டம்பர் 11-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் பற்றி இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்துத்தேர்வுக்கு பின் தேர்வானவர்கள் பட்டியல்வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள இணையதளத்திலும், 0413-2233215 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணிக்குள்ளும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு