Skip to main content

'ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாதந்தோறும், 1,250 ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய
அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகையைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதற்கட்டமாக மாநில அளவில், நவ., 8ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தேசிய அளவில் மே, 8ம் தேதி தேர்வு நடத்தப் படுகிறது. தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கும் தேர்வினை எழுத விரும்புபவர்கள் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 50 ரூபாய் தேர்வுக் கட்டணத்துடன், தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா