Skip to main content

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட கருவூலங்கள், சார்கருவூலங்கள் மற்றும் ஓய்வூதிய
அலுவலகம் ஆகியவற்றில் சென்னையில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்களும், நேர்காணல் செய்ய இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை நேர்காணலுக்கு வராதவர்கள் அல்லது வாழ்நாள் சான்றிதழ் அளிக்காதவர்கள் இம்மாதம் 28-ம் தேதிக்குள் நேர்காணல் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

நேர்காணலுக்கு வரமுடியாதவர்கள் உரிய மருத்துவர், அரசிதழ் சான்றிதழ் பெற்ற அலுவலர் மூலம் உரிய வாழ்வுச் சான்று அளிக்கலாம்.மேலும், புதிய மருத்துவ ஓய்வூதியர் நல காப்பீட்டுத் திட்டத்துக்கு உரிய விண்ணப்பத்தை இதுவரை கருவூலத்தில் அளிக்காதவர்கள் நேரில் சென்று உடன் விண்ணப்பிக்கவும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான அடையாள அட்டையைகருவூலத்தில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.