Skip to main content

பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கல்வித்தரத்தை அதிகரிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அதிக நிதியை பள்ளிக்கல்வித்துறைக்கு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்.


இதையொட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா கல்வி பொருட்கள் சரியானநேரத்தில் கிடைக்கச்செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அனைத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.அறிவிக்கப்பட்ட பொருட் கள் சரியாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து கண்காணித்து வருகிறார்.


அதன்படி விலை இல்லா கல்வி பொருட் கள் மாணவ-மாணவிகளுக்கு விலையின்றி கிடைத்து வருகிறது.இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முதன்மை செயலாளர் த.சபீதா அவ்வப்போது கூட்டம் நடத்தி அதை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.மேலும் இந்த ஆண்டில் (2015-2016) தேர்ச்சி பெறுவதற்கு கேள்விக்குறியாக உள்ள அரசு பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு அந்த அந்த மாவட்டத்தில் மெதுவாக கற்போர் என்று பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.இந்த நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கண்காணிப்பில் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.


அதாவது முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் சிலரை தேர்ந்து எடுத்து சேலம், ஈரோடு,திருச்செங்கோடு ஆகிய பயிற்சி மண்டலங்களில் தமிழ்நாடு முழுவதும்உள்ள மொத்தம் 1,023 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர் உள்ளனர். அந்த 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் அடுத்த மாதத்திற்குள் (செப்டம்பர்) ஏற்கனவே பயிற்சி பெற்ற 1,023 ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது.


இதற்காக பிளஸ்-2 அனைத்து பாடத்திலும் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதை தெரிந்து அதற்கேற்றபடி பாடங்களை படிக்க வைக்க சி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சி.டி. தமிழ்நாடு முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த சி.டி.யை அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரி காப்பி எடுத்துக்கொடுக்க உள்ளார். எப்படியும் 100 சதவீத தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் உள்ளனர். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு