Skip to main content

குரூப் - 2 பதவிகளுக்கு 24ம் தேதி கலந்தாய்வு

குரூப் - 2 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, வரும், 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குரூப் -- 2 நேர்முக தேர்வு பதவிகளில், 1,136 காலியிடங்களை நிரப்ப, முதன்மை எழுத்துத் தேர்வு, 2014 நவ., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற,
2,222 பேருக்கு, ஜூலை 15ம் தேதி முதல், ஆக., 8ம் தேதி வரை, நேர்காணல் நடந்தது; அதில் தேர்வானவர் விவரங்கள், ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டன.

நேர்காணலில் பங்கேற்ற, 2,222 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு, ஆக., 24ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும். எப்போது கலந்தாய்வு என்ற விவரம், அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.கடிதம் வராதவர்கள், தேர்வாணைய இணையதளத்தில் கடித நகலை பதிவிறக்கம் செய்து பங்கேற்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில், வர தவறினால், கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க முடியாது.தினமும் கலந்தாய்வு முடிந்தவுடன், காலியிட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு