Skip to main content

14.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'அட்லஸ்'

இரண்டு ஆண்டுகளுக்கு பின், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, 60 அம்சங்கள் அடங்கிய, 80 பக்க, 'அட்லஸ்' வழங்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகள்...
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 8, 9
மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 2011 முதல், அட்லஸ் என, அழைக்கப்படும் வரைபட புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் மட்டும், இந்தப் புத்தகம் வழங்கப்பட்டது; பின் தரப்படவில்லை.


இதுபற்றி விசாரித்தபோது, பல மாநில, மாவட்ட எல்லைகள் மாற்றம்; தெலுங்கானா புதிய மாநில உருவாக்கம் போன்றவற்றால், வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதால், வழங்கப்படவில்லை. தற்போது, இந்திய கணக்கெடுப்பு துறை அளித்த ஒப்புதலின்படி, புதிய அட்லஸ் புத்தகத்தை, தமிழக பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கிறது.

60 அம்சங்கள்
அதனால், 14.5 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் வழங்கப்பட உள்ளது. அதாவது, 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுடன் சேர்த்து, இந்த ஆண்டு, 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், அட்லஸ் வழங்கப்படுகிறது. புத்தகத்தில், 60 அம்சங்கள் பொதுவாக இடம் பெறும். மீதமுள்ள பக்கங்களில், அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ப, பாடப்புத்தகத்தில் உள்ள அம்சங்கள் இடம் பெறும்.
அட்லஸ் புத்தகத்தில் இடம் பெறும் அம்சங்கள்:
* சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், சூரிய ஒளி பூமியில் விழும் நாட்கள், பூமி, அவற்றிலுள்ள அடுக்குகள், எரிமலை, ஏரி, ஆறு, கடல் மற்றும் நீர்நிலைத் தடங்கள் போன்றவை இடம் பெறும் விளக்கப் படம்.
* வரைபடங்களின் வரலாறு, மாறிய வரைபடங்கள், செயற்கைக் கோள் படங்கள்; காலசூழ்நிலை குறித்த படங்கள்.
* தமிழக அரசியல், பண்டைய வரலாறு, புவி அமைப்பியல், மொழி மற்றும் மத ரீதியான மக்கள் தொகை எண்ணிக்கை விகிதம், ஆண், பெண் மற்றும் திருநங்கையர் பாலின விகிதம் கொண்ட படங்கள்.
* அசோகர், குப்தர், ஹர்ஷவர்தன் அரசர்களின் வரலாறு, முகலாய அரசர்கள் காலம், ஆங்கிலேய காலனி ஆதிக்கம், சுதந்திரத்துக்கு முன், பின், மற்றும் தற்போதைய இந்தியா. அரசியல் அளவிலான விவரங்கள்.
* மழை, காற்று, பருவ மாற்றம், பருவ காலங்கள் நிலவரம்.
* விவசாயம் மற்றும் மின்சார உற்பத்தி நிலவரம்.
* உலக நாடுகள், பருவ காலம், உலக நாடுகளின் கொடிகள்.
'புதிய புத்தகம் அச்சிடும் பணி செப்டம்பரில் துவங்குகிறது; அக்டோபர் முதல் வாரத்தில் புத்தகம் வழங்கப்படும்' என, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவைப் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்