Skip to main content

1,000 சிறப்பு பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., துணைத்தலைவர் பேச்சு

உயர்கல்வியை மேம்படுத்த ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ் கூறினார்.காரைக்குடிஅழகப்பா பல்கலை மகளிரியல் துறை சார்பில், 'பெண்களின் சமூக மாற்றம் மற்றும் சமத்துவ பாலினம்
' குறித்த கருத்தரங்கு துவங்கியது.

இதில் அவர் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக பல்கலை, கல்லுாரிகளில் 'பாலின சமநிலை' என்ற குறிக்கோளுடன் யு.ஜி.சி., செயல்படுகிறது; தற்போது அதை எட்டிவிட்டோம். அடுத்த 15 ஆண்டுகளில் தரத்தை முன்னிறுத்தி செயல்படுகிறோம். உயர்கல்வியில் யு.ஜி.சி., மூலம்ஆயிரம்சிறப்பு பேராசிரியர்கள் பல்கலை, கல்லுாரிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

யு.ஜி.சி.,யை மேம்படுத்தும் வகையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஹரிகவுதம் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. யு.ஜி.சி., க்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் முரண்பாடு இல்லை. தொலை நிலைக் கல்வியில் தவறுகளை களையவே அதன் எல்லைக்குள் படிப்பு நிலையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். 'மோக்ஸ்' (மாசிவ் ஓப்பன் ஆன் லைன் கோர்ஸ்) என்ற பெயரில் திறந்த வெளி இணைய படிப்பு யு.ஜி.சி.,யால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி அறிவிப்பின்படி 'சுயம்' எனப்படும் 'ஆன் லைன்' (போர்ட்டல்) படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் பாலின சமன்பாடு 42 சதவீதம் உள்ளது. 'வரும் 2020ல் பாலின சமன்பாடு 30 சதவீதத்தை எட்ட வேண்டும்' என, அப்துல்கலாம் கூறினார். தமிழகம் தற்போதே அதை தாண்டி விட்டது, என்றார்.

மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை வரவேற்றார். துணைவேந்தர் சுப்பையா, சிங்கப்பூர்பல்கலை பேராசிரியர் அனிதா லண்ட்பர்க், பேராசிரியர் முருகன் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு