Skip to main content

சிறுபான்மைப் பிரிவு மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு


சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீக
ரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதம், சீக்கியர், பார்சி, ஜெயின் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பித்தில் செய்யவும் ஜூலை 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும், கல்வி நிலையங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களைச் சமர்பிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, கல்வி நிலையங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு