Skip to main content

எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி

தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.சி. வீரமணி பேசி
யது: தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகின்றன. எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை. ஒரேயொரு அரசுப் பள்ளி கூட மூடப்படாத நிலையில், தேர்தலை மனதில் கொண்டே அடிப்படையில்லாத இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.


தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 139 நடுநிலைப் பள்ளிகள், 884 உயர்நிலைப் பள்ளிகள், 402 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,530 பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.எந்தவொரு நிதிநிலை அறிக்கையிலும் பாதுகாப்புத் துறைக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்குத்தான் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச சைக்கிள் திட்டம், லேப்-டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி இடைநிற்றலைக் குறைப்பதற்காக மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என்றார்.சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏ வி.பி.கலைராஜன், தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சண்முகவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு