Skip to main content

ஐ.சி.டி., திட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது


        தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 

        முதல்கட்ட ஆய்வுக்கு, 21 ஆசிரியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையின் கீழ், மாணவர்களுக்
கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐ.சி.டி., திட்டத்தின் கீழ், சிறப்புக் குழுவினர், 2013-14ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்ப முறையில், கற்பித்தல் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இம்முறைகளை சிறப்பாக பின்பற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், தேசிய விருதுக்கு தேர்வு செய்யவுள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும், 21 ஆசிரியர்கள் முதல்கட்ட ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், கடந்த வாரம், சிறப்புக்குழு முன் 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் அவரவரின் கற்பித்தல் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். கோவை மாவட்டத்திலிருந்து தொப்பம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை மணிமேகலை முதல்கட்ட ஆய்வுக்கு தேர்வுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஐ.சி.டி., திட்டத்தில், முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் கற்பித்தல் பணி, சிறப்புக்குழுவால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், தேசிய விருது குறித்து அறிவிப்பு வெளியாகும்' என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா