Skip to main content

சென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியலுடன் பெற்றோர் - ஆசிரியர் கழகம் புகார்


அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பு என்ற பெயரில், ரசீதே இல்லாமல், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடந்துள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் பட்டியலுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.


எச்சரிக்கை:அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், மாணவர்கள் சேரும் போது, அவர்களிடம் எந்த ரசீதும் தராமல், நன்கொடை வசூலிப்பது அதிகரித்து உள்ளது. 'நன்கொடை வசூலிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்தார்.ஆனாலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கே இல்லாமல் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வசூல் வேட்டை நடந்துள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோருக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, பெற் றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசு பள்ளியில், எக்காரணத்திற்காகவும், நன்கொடை வசூலிக்கக் கூடாது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம், தலா 4,500 ரூபாய்; ௬ம் வகுப்புக்கு, 500 - 1,000 ரூபாய்; 8ம், 9ம் வகுப்புக்கு, 3,500 ரூபாய் கட்டாய வசூல் செய்து, ரசீது வழங்காமல் ஏமாற்றுகின்றனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும், 150 மாணவ, மாணவியர் லட்சக்கணக்கில் நன்கொடை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.புகார்:சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த மாணவியரிடம், 800 - 5,000 ரூபாய் வரை, நன்கொடை வாங்கிக் கொண்டு, எந்த ரசீதும் வழங்கவில்லை என்றும், புகார் எழுந்து உள்ளது. பள்ளி நிர்வாகிகள் உதவியுடன், தனியார் சிலர், பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டு, வசூலில் ஈடுபடுவதாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே, பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு