Skip to main content

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீசாரின் ஆன்லைன் விசாரணை


        பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து போலீசார் விசாரணை நடத்தும் முறையை மாற்றி ஆன்லைன் விசாரணை முறையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட பணி நவம்பரில் தொடங்கும் என தெரிகிறது.

       வெளிநாடு செல்ல விரும்புவோர் மத்திய அரசிடம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்துவது வழக்கம். இதனால் தேவையில்லாத கால தாமதம் ஏற்படுவதுடன், விண்ணப்பிப்பவர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. எனவே இந்த முறையை மாற்றி ஆன் லைன் மூலமாக போலீசார் விசாரணை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான முதல் கட்டமாக பெங்களுர் நகரில் போலீசார் ஆன் லைன் விசாரணை முறையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட எஸ்பி அல்லது டிசிபி தரத்திலான காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

         தேசிய மக்கள் தொகை ஆவணம், ஆதார், கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்பதாரரின் குற்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் மீதான வழக்குகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுமார் 14 ஆயிரம் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுகின்றன.


இதுகுறித்து உள்துறை அதிகாரி கூறுகையில், கடந்த காலத்தில் போலீசாரின் விசாரணைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையில் இந்த முறையின் மூலமாக ஒரு வாரத்திற்குள் அந்த பணியை எளிதில் முடிக்க முடியும் என்று தெரிவித்தார். போலீசாரின் ஆன் லைன் விசாரணை முறை வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை வேறு சில திட்டங்களுக்கும் நீடிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு