Skip to main content

உதவி பேராசிரியர் நியமிக்க உயர் நீதிமன்றம் தடை

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில்,
உதவிப் பேராசிரியராக, ஒன்பது ஆண்டுகளாக இருக்கிறேன். கடந்த ஆண்டு, புதுச்சேரி மத்தியப் பல்கலை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கு புதிய நியமனம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

உதவிப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஜூலை 17ம் தேதி, பல்கலையில் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. என்னை விட தகுதி குறைவான நபர்கள், இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தகுதி இருந்தும் எனக்கு அழைப்புக் கடிதம் அனுப்பவில்லை. பல்கலையின் செயல், அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, 17ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில், உதவிப் பேராசிரியராக யாரையும் நியமிக்கக் கூடாது என, இடைக்கால தடை விதிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் பதவிக்கு, நான் அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க, பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில், தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 17ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, புதுச்சேரி மத்திய பல்கலை பதிவாளருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா