Skip to main content

சுகாதார பணிக்கு எஸ்.எஸ்.ஏ., நிதி:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்.


        பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., வழங்கும் நிதியை, சுகாதார பணிக்கு மட்டுமே  பயன் படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

         மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள்,
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி மானியம், 25 ஆயிரம், பராமரிப்பு நிதி, 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு பிரித்து தரப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்தி, பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், சேதமடைந்த வகுப்பறையை புதுப்பித்தல், கூடுதல் கட்டடம் கட்டுதல், கழிப்பிடம் கட்டுதல் போன்ற வசதிகளை செய்துகொள்ளலாம். இம்முறை, பள்ளிகளுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.ஏ., நிதியை முழுமையாக, சுகாதார பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய கழிப்பிடம், கூடுதல் கழிப்பிடங்கள் கட்டுதல், பழுதடைந்த கழிப்பிடங்களை புதுப்பித்தல், மாணவ, மாணவியருக்கு என தனித்தனியாக கழிப்பிட வசதி ஏற்படுத்துதல், சுத்தமாக பராமரித்தல், "செப்டிக் டேங்க்' அமைத்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே, இந்நிதியை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு