Skip to main content

மாணவர்களுக்கு பதில் பெற்றோர் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி

'மருத்துவ படிப்புக்கான, தேசிய மறு நுழைவுத்தேர்வு இன்று நடப்ப தால், மாநில கலந்தாய்வில், மாணவர்களுக்கு பதில், பெற்றோர் பங்கேற்கலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மத்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய நுழைவுத்தேர்வு, மே 3ம் தேதி நடந்தது. இதில், அரியானா உட்பட
, சில மாநிலங்களில், சில மாணவர்கள் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை ரகசியமாக பயன்படுத்தி, விடைகளை வெளியே இருந்து பெற்று, தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்தது.எனவே, மறுதேர்வு நடத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இன்று மறு நுழைவுத்தேர்வு நடக்கிறது; இதில், தமிழகத்தில் இருந்து, 23 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அதே நேரத்தில், தமிழகத்தில், மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது; இன்று, கலந்தாய்வு நிறைவடைகிறது.

            தேசிய மறு நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள், கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது:தேசிய மறு நுழைவுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர் பாதிக்கக் கூடாது என்பதால், இன்று, அவர்களின் பெற்றோர் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மாணவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதியுடன், முகவரி, அடையாள சான்றுடன் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா