Skip to main content

எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: தமிழக பள்ளிக் கல்வித்துறை


தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா இதனை தெரிவித்தார்.


தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது என அவர் கூறினார். 1,200 தொடக்க பள்ளிகளை மூடப்போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றது என்றும் சபிதா மறுத்தார்.முன்னதாக ஆயிரத்து 200 தொடக்க பள்ளிகள் மூடப்பட இருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்திருந்த தகவலை பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி இருந்தார். 

மேலும் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்