Skip to main content

தேசிய தொழில் சேவை இணையதளத்தில் வேலை தேடுவோருக்கு வேலை

அரசு நடத்தும் வேலைவாய்ப்பகங்களில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தும், தேசிய தொழில் சேவை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 'தேசிய தொழில் சேவை இணையதளம்' மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால், 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை
தேடுவோருக்கும், வேலை அளிப்போருக்கும், ஒரே தீர்வாக, இந்த இணையதளம் செயல்படும்.நாடு முழுவதும் உள்ள, 982 அரசு வேலைவாய்ப்பகங்களில் வேலை பெற, 4.4 கோடி பேர் ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர். முதற்கட்டமாக, இவர்களில், இரண்டு கோடி பேரின் தகவல்களை, அரசு இணையதளத்தில் இடம்பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்பது லட்சம் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை, அரசு இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.அரசின் வேலைவாய்ப்பக இணையதளத்தில் பதிவு செய்வதில் பிரச்னைகள், சந்தேகங்கள் இருந்தால், தெளிவு பெற, கட்டணமில்லா அழைப்பு எண் 1800-425-1514 தரப்பட்டுள்ளது. செவ்வாய் முதல், ஞாயிறு வரை, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா