Skip to main content

மாணவர்கள் மோதல் தடுக்க கவுன்சிலிங்


பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே
கடந்த சில மாதங்களாக சிறு சிறு பிரச்னைகளுக்காக ஜாதி ரீதியாக மோதல்கள் ஏற்பட்டு, பெரியவர்களிடையே மோதல் ஏற்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
ராஜபாளையம், கூமாபட்டி, திருத்தங்கல், சுந்தரபாண்டியம், வீரசோழன், சின்னையாபுரம் உட்பட மாணவர்களிடையே சமூக மோதல்கள் ஏற்பட்ட பள்ளிகளில் பள்ளிகல்வித்துறை சார்பில் உளவியலாளர் கார்த்திக்கேயன் மூலம் கவுன்சிலிங் வழங்கும் பணி நேற்று துவங்கியது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் ஜாதி மோதல்களில் ஈடுபடாமல் தவிர்க்க மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோருக்கு கவுன்சிலிங்க் கொடுக்கப்படுகிறது.முதற்கட்டமாக சின்னையாபுரம், தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலை பள்ளியில் நடக்கிறது ,என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா