Skip to main content

மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் சுப்பிரமணிய பாரதி


        மத்திய அரசு விரைவில் வெளியிடும் தபால் தலையில் தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் இடம் பெற உள்ளது.  

          இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்களின் புகைப்படங்களை அஞ்சல் தலைகளாக வெளியிட்டு அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை
செலுத்தி வருகிறது. 6 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஞ்சல் தலையில் புதிய மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகைப்படம் அஞ்சல் தலையில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான முடிவு தகவல் மற்றும் ஒளிபரபரப்புத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தலைமையில் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, புதிய அஞ்சல் தலையில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தா, பகத்சிங் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் விரைவில் அஞ்சல் தலைகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா