Skip to main content

ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயம்:தற்செயல் விடுப்புக்கு அனுமதி மறுப்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி மறுத்து, மாநில திட்ட இயக்குனர் எச்சரித்துள்ளார். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்காக மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.


மேலும், விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டால், அன்றைய தினத்துக்குபதிலாக, வேறு நாட்களில் ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயிற்சிகளில் பங்கேற்க பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஆர்வம் காணப்படுவதில்லை. சிலர், அன்றைய தினங்களில் விடுப்புஎடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதுகுறித்த புகார்கள் தொடர்ந்து, தலைமை அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டது. இதனால், பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு எடுப்பது அரசு விதிகளுக்கு முரணானது எனவும், இனிவரும் காலங்களில் பயிற்சி நாட்களில் தற்செயல் விடுப்பு அளித்தால், அது ரத்து செய்யப்பட்டு, ஆப்சென்ட் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்,உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்