Skip to main content

அப்துல் கலாம் பெயரில் விருது ; தமிழக அரசு அறிவிப்பு

மறைந்த அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கும் என முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த 27 ம்தேதி திடீரென
ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு நேற்று ராமேஸ்வரத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் கலாம் பெயரில் விமான நிலையத்திற்கு பெயர், ராமேஸ்வரத்தில் மணிமண்டபம், கலாம் பெயரில் பல்கலை., கலாம் இல்லம் குழந்தைகள் காட்சியகம் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் ஒருமுக சிந்தனை, விடாமுயற்சியால் , தலைசிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், திருக்குறள் வழி நடந்தவர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக திகழ்ந்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தவர். அனைவராலும் போற்றத்தக்க வகையில் வாழ்ந்த இவருக்கு பெருமை சேர்க்க , கலாமின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான அக். 15 இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படும்.
8 கிராம் தங்கம்- ரூ. 5 லட்சம் ரொக்கம்: மேலும் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் அப்துல்கலாம் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் வளர்ச்சி, மாணவர்கள் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அந்த நபருக்கு இந்த விருது வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ . 5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பும் , அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு