Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை


''வீட்டை விட்டு வெளியே வராத மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, சிகிச்சைஅளிக்க வேண்டும்'' என, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று,
சிகிச்சை அளிக்க, 4.50 கோடி ரூபாய் செலவில், 31 நகரும் சிகிச்சை பிரிவு வாகன சேவையை, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், 16ம் தேதி துவக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும், சிறப்பு வசதிகள், இந்த வாகனங்களில் உள்ளன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்கு வல்லுனர்கள், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை அளிப்பர் என, அறிவிக்கப்பட்டது. 

சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமலும், வெளியில் சென்றால், கவுரவம் பாதிக்கும் என நினைத்து, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மாற்றுத்திறனாளிகளை, வீடு வீடாகச் சென்று, கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். 

ஒரு பகுதிக்கு செல்வதற்கு முன், அதுபற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அதிகம் உள்ள இடங்களில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டன

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு