Skip to main content

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலை
வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதன்படி, மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

 தனியார், சுய வேலைவாய்ப்புகள் இல்லாமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருந்து, அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகள் பெற்றுள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம்.
 மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி மையத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருப்போர், சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனம் தொழில் திறனற்றோர்க்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். 

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பித்து, ஒராண்டு முடிந்தவர்கள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு