Skip to main content

'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்'


''உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்திய அளவில், தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது,'' என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், வெள்ளி விழா நேற்று முன்தினம் நடந்தது. வெள்ளி விழாதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், 1990ம் ஆண்டு செப்., 7
ம் தேதி துவக்கப்பட்டது. இதன் 25வது ஆண்டு வெள்ளி விழா, வரும் செப்டம்பரில் கொண்டாடப்பட வேண்டும்.தற்போது துணைவேந்தராக இருக்கும், குமரகுருவின் பதவிக்காலம், வரும் 22ம் தேதியுடன் நிறைவுபெறுவதால், தம் பதவிக்காலத்திலேயே விழாவை நடத்த திட்டமிட்டார்.அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற வெள்ளி விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா மற்றும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பம், முத்துக்கருப்பன், பிரபாகரன்; எம்.எல்.ஏ.,க்கள் கடம்பூர் ராஜூ, முத்துச்செல்வி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலையின் முகப்பில் தோரணவாயில், சுந்தரனாருக்கு ஆளுயர சிலை ஆகியவற்றை, அமைச்சர் பழனியப்பன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
தமிழகத்தில், உயர்கல்விகளில் மாணவர் சேர்க்கை விகிதம், 2011ல், 18 சதவீதமாக இருந்தது; இது, அதே ஆண்டில் இந்திய அளவில், 15 சதவீதமாகவும்; சர்வதேச அளவில், 23 சதவீதமாகவும்; வளர்ந்த நாடுகளில், 54 சதவீதமாகவும் இருந்தது.

42.8 சதவீதம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு இது, 38.2 சதவீதமாக உயர்ந்து, தற்போது, 42.8 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில் துணைவேந்தர் குமரகுரு, பதிவாளர் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் பங்கேற்றனர்.நெல்லை பல்கலையின் சார்பில், தமிழ்ப்பணிக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் சுந்தரனார் விருது, சீனி விஸ்வநாதன் (2014), இளையபெருமாள் (2015) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு