Skip to main content

ஆதிதிராவிடர் ஆசிரியர் கவுன்சிலிங் துவக்கம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது.



அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில்,'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து, விண்ணப்பித்தவர் மட்டும்,'ஆன் - லைன்' கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. 

மொத்தம், 314 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த கலந்தாய்வில், 54 பேர் பங்கேற்கவில்லை.191 பேருக்கு விரும்பிய இடம் கிடைக்காததால் இடமாறுதலை கைவிட்டனர். 69 பேர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இரண்டாவது நாளாக, இன்று, பட்டதாரி ஆசிரியர்; தமிழாசிரியர்; இடை நிலை ஆசிரியர்;உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா