Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தமிழக அரசு துறைகளிலுள்ள பல்வேறு பதவிகளுக்கு, பணி நியமனத்
தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் - 1, 1ஏ, 2, குரூப் - 4 என, குரூப் - 8 வரையிலான, படிநிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பதவிகள் என்ன; தேர்வுகள் நடக்கும் முறை என்ன; தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பது குறித்து, விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை அணுகிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் மற்றும் பட்டதாரிகளின், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பதவிகள், துறைகள் மற்றும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவரங்களை, http://www.tnpsc.gov.in/recruitment-faq.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு