Skip to main content

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு ராணுவத்தின் இணையதளத்தின் (www.joinindianarmy.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ராணுவப் படை வீரர்கள், இளநிலை அலுவலர்கள் ஆகிய பணியிடங்களில் காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க, ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


இணையம் மூலம் விண்ணப்பிக்கும் இந்த வசதி ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19-ல் நிறைவடைகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகளவு விண்ணப்பித்தால், கடைசி தேதி நீட்டிக்கப்படும். செல்லிடப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை பயன்படுத்தியும் ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவுடன், சில நாள்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். 

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்து ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் முகாமில் பங்கேற்கும் தேதி, நேரம் ஆகியன அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: இணையதளத்தில் தகவல்களைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். 

குறிப்பாக, கல்வித் தகுதி, பிறந்த தேதி, முகவரி ஆகிய விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை தகவல்களைப் பதிவு செய்தால் அதனை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. ஆள்சேர்ப்பு முகாமானது, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஆள்சேர்ப்பு முகாமில், முதல் கட்டத் தேர்வாக 1.6 கிலோமீட்டர் தூரத்தை 5.4 நிமிஷங்களில் ஓட வேண்டும். 
இதன்பின், உயரம், எடை, மார்பளவு ஆகியன அளவிடப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களின் கடைசி ஞாயிறன்று நடத்தப்படும்.இந்தத் தகவல்களை ராணுவ ஆள்சேர்ப்புக்கான சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு