Skip to main content

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை

ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், சமீபகாலமாக ஆபாச படங்கள் பார்த்தல், மது அருந்துதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற பல்வேறு புகார்கள்
மாணவர்களின் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், வளர் இளம் பருவத்தில் ரீதியான உடல் மனரீதியான மாற்றங்கள் குறித்து, இறை வணக்க கூட்டங்களிலும், நீதிபோதனை வகுப்புகளிலும் தொடர்ந்து விளக்கங்கள் அளித்து நல்வழிப்படுத்த
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவர்களின் நடவடிக்கைகளை இருதரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா