Skip to main content

மாணவர்கள் கற்றல்திறன் மாறுபாடுகற்பிக்கும் முறையே காரணம்


ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள்
குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது. இதற்கு ஒவ்வொருவரின் மூளையின் அடைவுத்திறன் வேறுபாடே காரணம்.இதை அறியாமல் பெற்றோர், ஆசிரியர்கள் 'படி, படி' என தொந்தரவு செய்வதால் மாணவர்களின் எண்ணங்கள் மாறுகின்றன. சிலர் தீய பழக்க வழக்கம், சினிமா போன்றவற்றுக்கு மாறிவிடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்தது.


பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது:ஒவ்வொரு மாணவரின் அடைவுத்திறனுக்கு ஏற்ப கற்பிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஆசிரியர்களால் முழுமையாக கற்பிக்க முடியாது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் 1:25 க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் கல்வித்திட்டத்தை மாற்ற வேண்டும். கற்பிக்கும் முறையை சிறந்த ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவம், ஆய்வின் அடிப்படையில் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு