Skip to main content

மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்

பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது....அதில் அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும் என்றார்.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா, அலோபதி, ஓமியோபதி,
யோகா என பல்வேறு வகையான மருத்துவ முறைகள் உள்ளன. மக்களுக்கு எந்தெந்த நோய்க்கு எந்த வகையான மருத்துவ முறை சிறந்தது என்பது தெரியாததால், அடிக்கடி மருத்துவ முறைகளை மாற்ற வேண்டியுள்ளது. இதனால், பொது மக்களுக்கு அதிகளவில் செலவாகிறது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், அனைத்து மருத்துவப் பிரிவுகளின் மருத்துவர்களையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். அக்குழு எந்தெந்த வகையான நோய்களுக்கு எந்த வகையான மருத்துவ முறை சிறந்தது என்பதை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயனடைவர்.
காத்மண்டுவைச் சேர்ந்த தலைமை துறவியும், மருத்துவ ஆராய்ச்சியாளருமான சோக்கி நிமா ரிம்போசி, டாக்டர் டேவிட் ஷிலிமுடன் சேர்ந்து, ‘மருத்துவம் மற்றும் கருணை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, தாராள குணம், நன்னெறி, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, ஒருமித்த கவனம், நுண்ணறிவு ஆகிய ஆறு ஒழுக்கப் பண்புகளை கடைபிடிக்க வேண்டும். இப்பண்புகளை மாணவர்கள் உருவாக்கிக் கொள்வர் என நம்புகிறேன். இவ்வாறு 2010-ம் ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா