Skip to main content

பள்ளி மாணவர் மூலம் நோய் விழிப்புணர்வு


பள்ளி மாணவர் உதவியுடன், தொற்று நோய் குறித்து, மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல்
போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதற்காக, சுகாதார உறுதிமொழி விண்ணப்பப் படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதை மாணவர்களிடம் வழங்கி, அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி வலியுறுத்தப்படுகிறது.இதன் மூலம், அப்படிவத்தில் உள்ள கருத்துகளை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வர். அவர்களும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுவர் என, உள்ளாட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.எனவே, தமிழகம் முழுவதும், இப்பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா