Skip to main content

மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்களை, தாமதமின்றி வழங்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகம், நோட்டுப்
புத்தகம், காலணிகள், சைக்கிள், 'லேப் - டாப்' வண்ணப்பென்சில் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.இதில், பிளஸ் 2 முடித்தபின், மாணவ, மாணவியருக்கு லேப் - டாப் வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு, இலவச சைக்கிள்களை தயாரித்து வழங்கும் தனியார் நிறுவனம், முன்கூட்டியே செயல்பட்டு, பள்ளிகள் திறக்கும் முன் சைக்கிள்களை மாவட்டங்களுக்கு அனுப்பியது. அதனால், இந்த சைக்கிள்கள் பல இடங்களில், மழை, வெயிலால் துருப்பிடித்து வீணாகும் சூழல்ஏற்பட்டது.இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, சில நாட்களுக்கு முன், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.இதையடுத்து, 'அனைத்து தகுதியான பள்ளிகளும், தங்கள் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை தாமதமின்றி வழங்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்