Skip to main content

மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்


அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் கே.நல்லதம்பி வெளியிட்ட அறிக்கை: 10-ஆம்
வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவர்களுக்கும் மேற்படிப்புக்கான உதவித்தொகையை அசோக் லைலேண்ட் நிறுவனம் வழங்குகிறது.
தகுதியான கனரக வாகன ஓட்டுநர்களின் வாரிசுதாரர்கள், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, அசோக் லைலேண்ட் மற்றும் டிவிஎஸ் உதவித்தொகை திட்டம், அசோக் லைலேண்ட் லிமிடெட், தென் மண்டல அலுவலகம், 3-ஆவது தளம் கிழக்குப் பகுதி, எண் 1 சர்தார் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு, வரும் ஆகஸ்ட
10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன