Skip to main content

டான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை


டான்சி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்காளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: டான்சி நி
றுவனத்தின் மேலாண்மை இயக்குநரால் மே்ற்குறிப்பிட்ட பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இளநிலை பட்டம் மற்றும் கணிப்பொறி கல்வியும் பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதோடு, எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி.எம், பி.சி.ஓ ஆகியோருக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை எதுவும் கிடையாது.


வர்த்தக கணக்காளர் பதவி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ. எஸ்.சி.எ ஆகியோருக்கு 13.07.2005 வரையிலும், இதரபிரிவினருக்கு 22.8.2012 வரையும், 

கலப்பு திருமணம் புரிந்தோருக்கு எஸ்.சி.எ-12.8.2010 வரையும், எஸ்.சி.ஓ-5.3.2001 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் எம்.பி.சி(பெண்கள்)-27.6.2003 வரையும், பி.சி(பெண்கள்)-21.8.2001 வரையும், இதர பிரிவினர்(பெண்கள்)-24.7.2000, பி.சி(பொது)-6.7.2001 வரையும், ஓ.சி(பொது)-31.7.2000, மாற்றுத்திறனாளிகள்-31.12.1996 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும். 

இளநிலை உதவியாளர் பணி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ-12.7.2006 வரையும், பி.சி.எம்-14.2.2015 வரையும், இதர பிரிவினர் 19.8.2002 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் பி.சி.எம்(பெண்கள்)-5.8.2003 வரையும், பி.சி.ஓ(பொது)-2.3.1998 வரையும், எஸ்.சி.எ(பொது)-19.9.2000, எம்.பி.சி(பொது)-26.6.2009 வரையும், மாற்றுத்திறனாளிகள் 31.12.1998 வரையும் இருக்க வேண்டும். 

 எனவே மேற்குறிப்பிட்ட தகுதி, பதிவு மூப்புள்ள பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. அதனால், அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவைகளுடன் நேரில் வருகிற 20ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.     

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு