Skip to main content

கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி


ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர்.
ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீடு முன், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சியினர், ஆட்டோ ஓட்டுனர்கள், மீனவர்கள் என,
அனைத்து தரப்பினரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.இவர்கள், கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், இவரது பேரன் சலீம் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், கலாம் படம் வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள், நேற்று திரண்டு வந்து, படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.ராமேஸ்வரம், மண்டபம் பள்ளி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து, அவரது வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராமேஸ்வரத்தில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா