Skip to main content

முதுகலை ஆசிரியர் பணி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு


முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் வினாத்தாளின் குறியீட்டு எண்ணை குறிப்பிடாததால் நிராகரிக்கப்பட்டவரின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் கள்ளிப்பட்டி வெள்ளிசுப்பையன் தாக்கல்
செய்த மனு:ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)சார்பில் முதுகலை பட்டதாரி (வரலாறு) ஆசிரியர் பணி நியமனத் தேர்வு ஜன.,10 ல் நடந்தது. வினாத்தாளின் வரிசை குறியீட்டு எண் விபரத்தை குறிப்பிடவில்லை எனக்கூறி எனது விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை.
மதிப்பீடு செய்யக்கோரி டி.ஆர்.பி., தலைவரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை இல்லை. விடைத்தாளை மதிப்பீடு செய்து பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.டி.ஆர்.பி.,பதில் மனு: விடைத்தாளில் (ஓ.எம்.ஆர்.,)வினாத்தாளின் குறியீட்டு எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். தேர்வில் ஏ, பி, சி, டி, வகை வினாத்தாள்கள் வினியோகிக்கப்பட்டது.
அனைத்திலும் 150 வினாக்கள் இருந்தாலும், வகைகளைப் பொறுத்து ஒவ்வொன்றிலும் வினாக்களின் வரிசை எண் இடம்மாறியிருக்கும். அதனடிப்படையில் வினாக்களுக்குரிய விடைச்சுருக்கம்
(கீ ஆன்சர்) இடம் பெற்றிருக்கும். மின்னணு முறையில் ஓ.எம்.ஆர்., சீட் மதிப்பீடு செய்யப்படுகிறது. விபரங்களை சரியாக பூர்த்தி செய்யாவிடில் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். மனுதாரர் குறியீட்டு எண்ணை குறிப்பிடாததால் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
நீதிபதி
டி.ஆர்.பி.,கூறுவது ஏற்புடையதே. மனுதாரரின் குறைபாடு சரிசெய்யக்கூடியதுதான். இதையே விடைத்தாளை மதிப்பீடு செய்யாததற்கு காரணமாக கூறுவதை ஏற்க முடியாது. தவறு மனித இயல்பே.
தவறு செய்பவன்தான் மனிதன். மனுதாரர் தகுதியானவராக இருக்கும்பட்சத்தில் கற்பித்தல் தொழிலுக்கு இழப்பு ஏற்படும். விடைத்தாளை மதிப்பீடு செய்வது தவறில்லை. 
பணி நியமனம் முடிந்துவிட்டது. மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டால், ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும், என டி.ஆர்.பி.,கூறுகிறது. விடைத்தாளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
மனுதாரர் தகுதியானவராக இருந்து தேர்ச்சி பெறும் பட்சத்தில், காலி இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் ஏ.வேலன் ஆஜரானார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா