Skip to main content

கிரெடிட் கார்ட் கடனுக்கு புதிய விதிமுறை: 90 நாளில் செலுத்தாவிட்டால் வாராக்கடன்

கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்ட் விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு வங்
கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால், அபராதம் வசூலிக்கவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

ஆனால், அபராதம் வசூலிப்பது அல்லது வாராக்கடன் பட்டியலில் சேர்த்து கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வங்கிகள் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க இந்த புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்