Skip to main content

கிரெடிட் கார்ட் கடனுக்கு புதிய விதிமுறை: 90 நாளில் செலுத்தாவிட்டால் வாராக்கடன்

கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்ட் விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு வங்
கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால், அபராதம் வசூலிக்கவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

ஆனால், அபராதம் வசூலிப்பது அல்லது வாராக்கடன் பட்டியலில் சேர்த்து கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வங்கிகள் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க இந்த புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா