கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் விதிமுறைகளைக் கடுமையாக்குமாறு வங்
கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால், அபராதம் வசூலிக்கவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
ஆனால், அபராதம் வசூலிப்பது அல்லது வாராக்கடன் பட்டியலில் சேர்த்து கடன் தகவல் அமைப்புகளுக்கு தெரிவிப்பது என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வங்கிகள் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க இந்த புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.