Skip to main content

விபத்தில் சிக்குவோருக்கு உதவிசெய்ய 70,000 மாணவருக்கு முதலுதவி பயிற்சி

தமிழகத்தில், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி பயிற்சி அளிக்கும் முகாம் துவங்கியது.இதுகுறித்து, தமிழ்நாடு எலும்பு, முடநீக்கியல் நிபுணர் சங்க மாநிலத் தலைவர் ராஜா ரவிவர்மா கூறியதாவது:இந்தியாவில், சாலை விபத்துகளால்,
ஒரு மணி நேரத்துக்கு, 16 பேர் மரணம் அடைகின்றனர். கடந்த ஆண்டு நடந்த, 4 லட்சத்து, 5௦ ஆயிரம் சாலை விபத்துகளில், 1 லட்சத்து, 1 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த, 77 ஆயிரத்து, 725 விபத்துகளில், 15 ஆயிரத்து, 190 பேர் இறந்துள்ளனர். சாலை விதிமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம். எனவே, ஆக., 4, தேசிய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு, எங்கள் சங்கம் சார்பில், கடந்த, 29ம் தேதி முதல், மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, அவசரகால முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சியும் அன்று துவங்கியது. அடுத்த ஆண்டுக்குள், ௭௦ ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்து விடுவோம்.சென்னையில், ஆக., 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தல், முதியோருக்கு எலும்புச் சத்து அறியும் பரிசோதனை முகாம்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடல், ரத்ததான முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. ஆக., 4ம் தேதி, சென்னை மெரீனாவில், மாணவர், பொதுமக்கள் பங்கேற்கும், 'வாக்கத்தான்' நடத்தப்படுகிறது. 
இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு